வளைந்து நெளிந்து செல்லும்
நதியொன்றின்
இருபுறமும் செந்நிற
மலைமுகடுகள்
பரவிக்கிடக்கிறது.
நதி நனைத்திடாத
மலை உச்சியில
அமர்ந்திருப்பவனின்
மனவெளிகள்
நதியெங்கும் வியாபித்திருக்கிறது.
தனிமையில்
அமர்ந்துணர்ந்த
வெறுமையில்
அறிந்ததெல்லாம்
பிரபஞ்சமும் தனிமையும்
ஒன்றுதான் பிரிப்பதற்கில்லை.
இரண்டுமே ஒன்றெனில்
நதியும் நீயும்
ஒன்றுதான்.
மலைமுகடுகளுக்கும்
அடிவாரங்களுக்கும்
இடையில்
எங்கிருந்து வருகிறது
உயர்வு தாழ்வு?
No comments:
Post a Comment