Thursday, June 4, 2020

தோழி சுந்தரவள்ளி

எந்த ஷாஹாவிலும்
உருவாக்க முடியாது!

எந்த பள்ளிகளிலும்
உருவாக்க முடியாது!

எந்த கோவில்களிலும்
உருவாக்க முடியாது!

எந்த மசூதிகளிலும்
உருவாக்க முடியாது!

எந்த சர்ச்சுகளிலும்
உருவாக்க முடியாது!

எந்த இயக்கங்களிலும்
உருவாக்க முடியாது!

எந்த தனிநபர்களும் 
உருவாக்க முடியாது!

எந்த அமைப்புகளும்
உருவாக்க முடியாது!

காலம் அவர்களை
உருவாக்குகிறது!

வரலாறு முழுவதும்
வழிகாட்டிகளை காலம்
உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது!

அவர்களை
உருவாக்கிய காலத்திற்கு
நாம் எப்பொழுதும் 
கடமைப் பட்டிருக்கிறோம்!

வரலாற்றின் அத்தனை
துயரங்களையும் நாம்
வழிகாட்டிகளின் வழியாகவே
கடந்து வந்திருக்கிறோம்!

சமத்துவம் வெல்கவென்று கூத்திடுவோமடா!

No comments:

Post a Comment