Saturday, February 28, 2009
எனக்கே எனக்காக
தொலைவிலிருக்கும்போது
பாறையாக தெரிந்தாலும்
அருகிலே தெரியும்
நீ
கல்லுக்குள் ஈரம்."
- தோழர்.பூங்குமரன்
போதனை
பேதங்களின்
வழியே
போதித்து
செல்கிறது
வாழ்க்கை!
--------------------
பூக்கள் என்ன
ஜென் துறவிகளா
மௌனமாகவே
போதிக்கிறது!
--------------------
மாற்றம் என்பது
சோனி - ஸ்பைஷ்,
பானசோனிக் - ஏர்செல்,
மோட்டரோலா - வோடபோன்,
சாம்சங் - ஐடியா
ரிலையன்ஸ்
ஆண் பெண்ணை,
பெண் ஆண்ணை
(ஏ) மாற்றும்போது
மாறிவிடுகிறது.
மொபைலும்,
ஆபரேட்டரும்!
தற்போது,
புதிதாக
வர்ஜின்,
ஆண்
பெண்.
அடையாளங்களாய்
சோனி எரிக்சன்,
டெல்,
ஆப்பிள்,
நிக்கான்,
பிளாக்பெர்ரி
இவைகளோடு
மிஞ்சி இருக்கிறது
வாழாத வாழ்க்கையின்
அடையாளம்!
Thursday, February 26, 2009
தைரியம் வந்தபிறகு...
அதிகாலை
மென்காற்றின்
சுகத்தோடு
உறங்கிக்கொண்டே
இருக்கிறாய்.
நான்
எழுந்த பிறகும்!
நகங்கள் கீறிய
மார்பும்,
பற்கள் கிழித்த
கீழுதடும்,
இன்னும் சில இடங்களும்
எரிந்து கொண்டே
இருக்கிறது.
என்றாவதொரு நாள்
உன் ஆண்குறி கீறி
வலி உணரச் செய்வேன்.
தைரியம் வந்தபிறகு...
நிழற்பட கருவி..
யாருமற்று,
நிழற்பட கருவியை
முக்காலியில்
பொருத்தி
தானியங்கி விசையை
அழுத்திவிட்டு
எதிரில் நின்றேன்.
கிளிக்...
நிழல் விழாத
பிம்பம் பதிவானது,
பசுமையான
பின்புலத்தோடு
தனியாக.
வலி உணர்ந்தது மனது!
நானென்பது
வேறு யாருமற்ற
நான் மட்டுமென்று...
Tuesday, February 24, 2009
மீண்டும் பாரதிக்கு...
நேரே இன்றெனக்குத் தருவாய் -என்றன்
முன்னைத் தீயவினைப் பயன்கள் -இன்னும்
மூளாதழிந்திடுதல் வேண்டும் -இனி
என்னைப் புதிய உயிராக்கி -எனக்கேதுங்
கவலையறச் செய்து -மதி
தன்னை மிகத் தெளிவு செய்து -என்றும்
சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்!
- பாரதி
உரிமையோடு கடவுளிடம் பேசுகிறான். வார்த்தைகள் ஒவ்வொன்றிலும் சத்தியம் தெறிக்கிறது. எதையும் எதிர்பார்க்காமல் பணிசெய்து இறந்தவனை கனவில் சந்தித்தபோது கேட்டே விட்டேன். சாகித்திய விருது வாங்க எந்த கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டுமென. சிரித்து விட்டு சென்றுவிட்டான். தூக்கம் களைந்து யோசித்த வேளையில் பாரதிக்கு ஏன் பாரத ரத்னா கொடுக்கவில்லை என்ற கேள்வி வந்தது.யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
Tuesday, February 17, 2009
மாயப் பிசாசு!
மயிலாக வந்துநிற்கும்
மாயப் பிசாசு!
மார்பு முலைகாட்டி
மயக்கிடுமே அவள் தேகம் !
கூடும் இன்பத்தை
கொடுக்கின்ற துர்புத்தி
தானதனால் கொள்வானே
அவள் தேகம் குணமிழந்து !
விவேகம் அறியாமல்
வினைவலியும் உணராமல்
சீறும் வினையதுவின்
சிநேகத்தில் வீழ்வானே !
தேகம் பொய் மறந்து
வேகம் தனதாக்கி
வீழ்வானே...காமப்பேயின்
கடுஞ்சிறையில்...தானாக !
நாணந்தனை இழந்து
நடுவீதி தானின்று
பார்வையிலே பேசினாலும்
பாவையவள்
கூற்றுவன் தூதன் தானே !
கோதையவள் தீது என்றுணர்ந்து
பேதை மனத்தை நீ பிடிப்போடு இருக்கச்செய்
என் இறைவா !!!
பட்டினத்து அடிகளின் பாடலைப் படித்துவிட்டு எழுதியது...
யார் இவர்கள்...
தேடும் இடந்தன்னில்
சேராமல் தானொதுங்கி நின்று
வாடும் இடம் சேர்ந்தே வாழ்ந்திடுவார்.
கேடும் புரியார்! கெட்டவர்கள் அடிசேரார்
வேடம் தான் ஏனோ!
விம்மலும் தானேனோ!
ஏனோ வரவில்லை அவள்
உயிர் அடையும் இன்பமெல்லாம்
உனை எண்ணும் நிலையாலே
இவன் அடைய மாட்டானோ!
கன்னி அவள் நினைவு
கண் நிறைந்து நின்றாலும்
சொன்ன நாளில் அவள்
மலர் சூட வரவில்லை!
வஞ்சம் செய்தாலும்
நெஞ்சகத்தே வலியில்லை.
கொஞ்சியவள் வார்த்தைகளில்
கோபம் மறந்தானே!
கன்னி நெஞ்சதுவோ...
கல் நெஞ்சதுவோ...
பிஞ்சு மனதாலே
பேதலித்து
புலம்புகிறான்!
கோதையவள் பேச்சில்
போதையானான்
யார் இவனோ...
குற்றவாளி தப்பிவிட்டாள்
சம்பவம் நிகழ்ந்தது
பேருந்து நிறுத்தத்தில்..
வெடித்தது குண்டு.
தொலைவிலிருந்து இயக்கப்பட்டுள்ளது .
இயக்கியது ஒரு பெண்.
குற்றவாளி தப்பிவிட்டாள்
பாதிப்பு இவனுக்கு மட்டுமே...
குற்றஉணர்ச்சி
எதிர்பாராத கணங்களில்
நிகழ்ந்துவிடுகிறது.
கற்பிழந்தவனும்
இழக்கச்செய்தவளும் - ஒரே
பேருந்து நிறுத்தத்தில்
வெவ்வேறு
குற்றஉணர்ச்சியில்...
போர் ஆட்டம்
இதையே செய் - புத்தி
ஏன் செய்ய - உடல்
அனைவருக்குமான
போராட்டத்திற்கு முன்பே
தொடங்கிவிட்டிருக்கிறது
எனக்கான போராட்டம்...
Sunday, February 8, 2009
இரண்டு நிமிடம்...ஒன்லி டூ மினிட்ஸ்...
"சீக்கிரம் வந்துடுடா " என்றான் நண்பன்.
இரண்டு நிமிஷத்தில வந்திடுறேண்டான்னு உள்ள போயிட்டு அஞ்சு நிமிஷம் கழித்துதான் வந்தேன்.
நண்பன் வெறித்துப் பார்த்தான்...
அவன் கோவத்தை தவிர்க்க, சிரிச்சுகிட்டே சாரி சொல்லிட்டு ஆபிஸ் போயிட்டேன்
மாலை நாலரை மணியளவில் நண்பனிடமிருந்து கால் வந்தது...
"சாயங்காலம் ஏழரை மணிக்கு சியர்ஸ் பாருக்கு வாடா "
சரிடானு சொல்லி வச்சுட்டேன்.
சற்று முன் வந்த போன் கால் பத்தியே நினைவு சுற்றி வந்தது. அன்று புதன் கிழமை . நார்மலா நாங்க வேலை நாட்களில் பாருக்கு போகமாட்டோம். என்ன பிரச்சனையா இருக்கும். எதுவா இருந்தாலும் அங்கபோயி பாத்துக்கலாம்னு நினைத்துக் கொண்டேன்.
ஆறு மணிக்கு ஆபிஸ் முடிச்சு, தி.நகர் பஸ் புடிச்சு சியர்ஸ் பாருக்குள் நுழைந்தபோது ஏழேகால் ஆயிடுச்சு. எனக்கு முன்பாகவே நண்பன் குடிக்க ஆரம்பித்து இருந்தான். எனக்கு எல்லாமே புதிதாக இருந்தது. இவனுக்கு என்னாச்சு இன்னைக்கு என்று யோசித்தபடி, எனக்கு ஸ்காட்ச் விஸ்கி ஆர்டர் செய்தேன்.
"என்னடா ஆச்சு உனக்கு" என்றேன்.
"ஒண்ணுமில்லை" என்றான்.
"அப்புறம் ஏன்டா புதன் கிழமை போதையில இருக்க".
"காலையில நீ என்ன சொன்ன " என்றான்.
"ஒன்னும் சொல்லலியே" என்றேன்.
"நல்ல யோசிச்சுப்பார்"
"ம்ம்...தெரியலடா...நீயே சொல்லு...
"ரெண்டு நிமிஷம் சொன்னல்ல..."
ஆமாம்..அதுக்கும் இதுக்கும் என்னடா சம்பந்தம்...புரியாமலே கேட்டேன்...
அவ அப்படித்தான் சொல்லுவா... அவன் கண்கள் கலங்கியிருந்தன...
மெல்ல புரியத் தொடங்கியது...நான் சொன்ன வார்த்தை, அவன் காதலை நினைவு படுத்திவிட்டது...
அவனிடம் சாரி...சொன்னேன்...
அவனே பேசத் தொடங்கியிருந்தான்...
அப்பல்லாம் சோறு தண்ணி இல்லாம அவகூட பேசிக்கிட்டு இருப்பேன்...என்னமோ தெரியல அப்ப நான் ரொம்பவே சந்தோசமா இருப்பேன்..ரொம்பவே...
பத்து பதினைந்து முறை போன் பண்ணுவா...
ஒரு நாளைக்கா...
இல்லடா ஒரு மணி நேரத்துல... சுடு தண்ணி வைக்கிறதுல இருந்து சோறு குழம்பு வைக்கிறது வரைக்கும் சந்தேகம்னா எனக்கு போன் பண்ணுவா...
திடீர்னு போன் பண்ணுவா...நான் பிசியா இருக்கேன்... அப்புறம் பேசுறேன்னு சொன்ன... இரண்டு நிமிஷம்...ஒன்லி டூ மினிட்ஸ்னு...சொல்லுவா...அவ சொல்லுறத கேக்குறதுக்கு கோடிஆயிசு வேணும்டா...
இப்பத்தான் தெளிவா இரண்டு நிமிஷ கதையே எனக்கு புரிய ஆரம்பிச்சது...
அவனை பார்க்கும்போது பரிதாபமா இருந்துச்சு...
ஒரு மென்பொருள் கம்பெனில சீனியர் கன்சல்டன்ட்...அவன்கிட்ட ஏழெட்டு பேரு வேலை பாக்குறாங்க.. குழந்தைங்க மாதிரி வார்த்தை தடுமாறி கண்ணு கலங்கி மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு...
"டேய்...நான் பேசிக்கிட்டே இருக்கேன்.நீயென்ன மயிரா புடுங்குற.." கத்தினான்.
நம்முடைய சரி, தவறுகள் ஏற்படுத்தும் கோவம் எவ்ளோ விகாரமானது புரிஞ்சுக்க முடிஞ்சது.
சரி சொல்லுடா.. என்றேன்.
ஏதேதோ பேசினான்...இடையிடையே நான்தாண்டா தப்பு பண்ணிட்டேன்...அவ நல்லவடா..எனக்குதான் கொடுப்பினை இல்லைன்னு வேற புலம்பி கொண்டே வந்தான்.
பில் செட்டில் பண்ணிட்டு , ஹோட்டல் போயி சாப்பிட்டுட்டு பஸ் புடிச்சு ரூமுக்கு வந்து அவனை தூங்க வச்சிட்டு ஒரு சிகரெட் எடுத்துகிட்டு மொட்டை மாடிக்கு போனேன்.
தூரமா யாரோ குழாயில தண்ணி அடிச்சுகிட்டு இருந்தாங்க...பக்கத்து வீட்டுல இருந்து தாலாட்டு பாட்டும் குழந்தை அழற சத்தமும் கேட்டுகிட்டு இருந்துச்சு...
கொஞ்சம் நேரம் கழிச்சு கீழ வந்து படுத்தா தூக்கம் வரலை .
யாரோ அழுத கண்ணீரும், குடிச்சுட்டு போட்ட சிகரெட்டும் அங்கேயே கிடந்திருக்கும்...
Monday, February 2, 2009
ப்ளீஸ்!இந்த புத்தகத்தை வாங்காதீங்க! - புத்தகப் பார்வை
கடவுளும் நானும் - புத்தகப் பார்வை
"நாஸ்திகர்களோ, பகுத்தறிவாதிகளோஇந்த புத்தகத்தைப் படித்து சிரமப்பட வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்ற எச்சரிக்கையோடு தொடங்குகிறார். தான் கடவுளிடம் சாட்சி கேட்டு நின்றவன்.சாட்சி கிடைத்தது நம்புகிறேன் என்று முதலிலேயே சொல்லிவிடுகிறார். வெவ்வேறு காலங்களில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை இறைவனோடு தொடர்புபடுத்தி புத்தகம் முழுவதும் சொல்லுகிறார்.
"கடவுளை நம்பாத எழுத்தாளனே உலகில் இல்லை" அழுத்தமான நம்பிக்கை. நிதர்சனமான வரிகள். "நரகம் என்றால் என்ன?" என்ற கேள்வியின் பதிலாக " அன்பு செலுத்த இயலாமல் போவதே நரகம்" என்ற வரிகள் கண்ணீர் துளிர்க்க செய்கிறது. நாகூர் ஆண்டவரின் வரலாறு தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. அவரைப் பற்றி நிறையவே சொல்லி இருக்கிறார். இஸ்லாம் இந்தியாவில் நிலைப் பெறக் காரணமாக சூபியை சொல்லுகிறார். வாரணாசியில் சாமுண்டி தெய்வத்துடனான இறை அனுபவக் கவிதைகள் உணர்வுபூர்வமாக சொல்லப்பட்டுள்ளது.
"கைப்பிடி நாயகன் தூங்கையிலே அவன் கையெடுத்து
அப்புறம்தன்னில் அசையாமல் முன்வைத்து அயல்வளவில்
ஒப்புடன் சென்று துயில்நீத்துப் பின்புவந்து உறங்குவளை
எப்படி நான் நம்புவேன் இறைவா கச்சி ஏகம்பனே!"
மொழிப்பெயர்ப்பு கஸல் கவிதை. அழகியலுக்கு ஒரு எடுத்துக்காட்டு...
"காதலையும் தர்க்கத்தையும்
ஒப்பிட்டுப் பார்த்தேன்
சமுத்திரத்தில் விழும்
ஒரு மழைத்துளிதான்
தர்க்கம்..."
பிஸ்மில்லா கானின் பாலாஜி கோவில் இறை அனுபவம் நெகிழ்ச்சியான ஒன்று. ஷீரடி சாய் பாபாவின் புகைப்படத்திலிருந்து திருநீறு கொட்டிய நிகழ்ச்சி என்பது சாருவின் மூலம் கேட்கும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை...
-
மனிதர்களற்ற இடம்தேடி அமர்வதே இயல்பாகிவிடுகிறது முதலில் ... எல்லா பேருந்து பயணங்களின் தொடக்கத்திலும். --------------------------------------...
-
நேற்று இரவு உனது மங்கலான நினைவு என் இதயத்தை நிரப்பியது! வனாந்தரத்தில் வசந்தத்தின் அமைதியான வருகையைப் போல, பாலைவன தென்றலின் மென்மையான காலடிய...
-
புத்தகக் கடைகளிலெல்லாம் உனக்குப் பிடித்த புத்தகங்களையே புதிது புதிதாக என்னிடம் தருகிறார்கள்.... பரிசளிக்க முடியதென்றாலும் பத்திரமாய...