எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
பாலினம்…!
எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
உண்மை…!
எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
நேர்மை…!
எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
துயரம்…!
எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
சாதி,மதம்…!
எல்லா
கவிதைகளிலும்
கண்டறிய முடிவதில்லை
கவிஞர்களின்
வாழ்க்கை…!
எல்லா
கவிதைகளிலும்
கண்டறிந்துவிடுகிறோம்
சில கவிஞர்களை…!